அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் குடியரசு தின விழா இனிதே நடைபெற்றது.
இதில் கல்லூரியின் தாலாளர் ஹாஜி ஜனாப் K.S. சரஃபுதீன் அவர்கள் கொடியேற்றி வைத்தார். கல்லூரியின் முதல்வர் ஹாஜி ஜனாப் A. ஜலால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.நாட்டு நல சேவைகளில் ஈடுபட்டு சாதனைகள் பல புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 34 ஆண்டுகள் ஆசிரியப்பணியை செம்மையாக மேற்கொண்ட பேராசிரியர் ஜனாப் சீனி கமால் அவர்கள் குடியரசு தின உரையை சிறப்பாக நிகழ்த்தினார். கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் ஜனாப் உதுமான் கனி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர், கல்லூரி முதல்வர் துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment